கோவை தொழிலதிபர் மனைவியிடம் சிபிஐ அதிகாரி போல நடித்து ரூ.52 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

கோவையில் தொழிலதிபர் மனைவியிடம் சிபிஐ அதிகாரி போல நடித்து ரூ.52 லட்சம் மோசடி செய்த வழக்கில் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொலைபேசி மூலம் மோசடி செய்யப்பட்டது.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜவுளித் தொழிலதிபர் ஆனந்தன் (52) மனைவி ஆர்த்தி (47) என்பவரிடம் சிபிஐ அதிகாரி போல நடித்து ரூ.52 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் ஆர்த்தியின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. அழைத்தவர்கள் தங்களை மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், பணப்பரிமாற்றம் தொடர்பாக நடைபெற்ற மோசடி குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறினர். இதை நம்பிய ஆர்த்தி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பின்னர், அந்நபர்கள் வங்கிக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி, அதன் விவரங்களைக் கேட்டனர். மேலும், ஆர்த்தியின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.52 லட்சத்தை, தாங்கள் கூறும் வங்கி எண்ணுக்கு பரிமாற்றம் செய்யுமாறும், விசாரணை முடிந்த பிறகு பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

இதை உண்மை என நம்பிய ஆர்த்தி, அந்நபர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு ரூ.52 லட்சத்தை பரிமாற்றம் செய்தார். அதன் பிறகு, அந்நபர்கள் தொடர்பை துண்டித்துவிட்டனர். அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

இது குறித்து செப்டம்பர் 23 அன்று ஆர்த்தி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மோசடி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...