கோவை தொழிலதிபர் மனைவியிடம் சிபிஐ அதிகாரி போல நடித்து ரூ.52 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

கோவையில் தொழிலதிபர் மனைவியிடம் சிபிஐ அதிகாரி போல நடித்து ரூ.52 லட்சம் மோசடி செய்த வழக்கில் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொலைபேசி மூலம் மோசடி செய்யப்பட்டது.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜவுளித் தொழிலதிபர் ஆனந்தன் (52) மனைவி ஆர்த்தி (47) என்பவரிடம் சிபிஐ அதிகாரி போல நடித்து ரூ.52 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் ஆர்த்தியின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. அழைத்தவர்கள் தங்களை மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், பணப்பரிமாற்றம் தொடர்பாக நடைபெற்ற மோசடி குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறினர். இதை நம்பிய ஆர்த்தி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பின்னர், அந்நபர்கள் வங்கிக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி, அதன் விவரங்களைக் கேட்டனர். மேலும், ஆர்த்தியின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.52 லட்சத்தை, தாங்கள் கூறும் வங்கி எண்ணுக்கு பரிமாற்றம் செய்யுமாறும், விசாரணை முடிந்த பிறகு பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

இதை உண்மை என நம்பிய ஆர்த்தி, அந்நபர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு ரூ.52 லட்சத்தை பரிமாற்றம் செய்தார். அதன் பிறகு, அந்நபர்கள் தொடர்பை துண்டித்துவிட்டனர். அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

இது குறித்து செப்டம்பர் 23 அன்று ஆர்த்தி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மோசடி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...