கோவை மாவட்டத்தில் சலவைத் தொழிலாளர்களுக்கு தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டம் - ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் சலவைத் தொழிலாளர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக சமையல் எரிவாயுவால் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், சலவைத் தொழில் மேற்கொள்ளும் ஏழைகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக சமையல் எரிவாயுவால் இயங்கும் தேய்ப்பு பெட்டிகளை வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் நல இன மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சலவைத் தொழிலை மேற்கொள்ளும் ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், சமையல் எரிவாயு பயன்படுத்தி இயக்கப்படும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, பொருளாதாரத்தில் பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சலவைத் தொழிலில் ஈடுபடுவோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார். தகுதியுள்ள பயனாளிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...