உலக மருந்தாளுநர்கள் தினம்: கோவையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கோவையில் உலக மருந்தாளுநர்கள் தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி மற்றும் இந்திய மருந்து சங்கம் சார்பில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பேரணியை தொடங்கி வைத்தார்.



Coimbatore: உலக மருந்தாளுநர்கள் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. "மருந்தாளுநர்கள்: உலகளாவிய சுகாதாரத் தேவைகளை சந்தித்தல்" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த பேரணிக்கு எஸ்.என்.எஸ் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி மற்றும் இந்திய மருந்து சங்கம் (IPA) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.



பேரணியில் கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு மருந்தியல் கல்லூரிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மருந்து பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மருந்தாளுநரின் பங்களிப்புகளை எடுத்துரைக்கும் பதாகைகளை மாணவர்கள் பேரணியின் போது ஏந்தி சென்றனர்.

இந்த பேரணியானது கோவை ரேஸ் கோர்ஸ், ஸ்ரீ சாரதாம்பாள் கோவில் அருகே 2.5 கிலோமீட்டர் தொலைவு வரை தொடங்கி முடிந்தது. மருந்தாளுநர்களின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் சேவைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதே இந்த பேரணியின் முக்கிய நோக்கமாக இருந்தது.



Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...