கோவையில் கால்நடை கணக்கெடுப்பு: பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரும் மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் அக்டோபர் 2024-ல் தொடங்கும் 21-வது கால்நடை கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கோரியுள்ளார். கணக்கெடுப்பு பணிக்கு 234 கணக்கெடுப்பாளர்களும், 48 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (செப்டம்பர் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில், கால்நடை கணக்கெடுப்பு பணி குறித்த முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

கால்நடை கணக்கெடுப்பு பணி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசின் சார்பில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பின் மூலம் கால்நடைகள் தொடர்பான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கால்நடைகளின் நலம் பேணுவதற்கான சரியான தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.

இந்த கணக்கெடுப்பில் வீடுகள், கடைகள், தோட்டங்கள், பண்ணைகளில் உள்ள மாடு, எருமை, ஆடு, குதிரை, நாய், பன்றி, கோழி, வாத்து போன்ற அனைத்து வகையான கால்நடைகளும் கணக்கெடுக்கப்படும். இந்த கணக்கெடுப்பு இதற்காக உருவாக்கப்பட்ட செயலியின் மூலம் கைபேசியில் பதிவு செய்யப்படும்.

தற்போது நாடு தழுவிய 21-வது கால்நடை கணக்கெடுப்பு பணி அக்டோபர் 2024 மாத ஆரம்பத்தில் தொடங்கப்பட உள்ளது. இப்பணிக்காக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 234 கணக்கெடுப்பாளர்களும், அவர்களின் பணியை கூர்ந்தாய்வு செய்ய 48 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இத்திட்டப் பணி தொடர்பான பயிற்சிகள் பல்வேறு நிலைகளில் வழங்கப்பட்டுள்ளன.

அக்டோபர் மாத ஆரம்பத்தில் தொடங்கவிருக்கும் கால்நடை கணக்கெடுப்புப் பணி குறித்த விவரங்களை சேகரிக்க வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை நல்ல முறையில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...