பழனி பஞ்சாமிர்தம் குறித்த வதந்தி: பாஜக நிர்வாகி செல்வகுமார் மீது வழக்கு

பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பியதாக பாஜக தொழிற் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் இரு பிரிவுகளில் வழக்கு பதிவாகியுள்ளது.


பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பியதாக பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த பாஜக தொழிற் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் செல்வகுமார் மீது கோயில் தேவஸ்தான நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழனி கோயிலுக்கு திண்டுக்கல் தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்குவதாக வலைத்தளங்களில் செல்வகுமார் தவறான தகவல் பரப்பி வந்தார். வதந்தி பரப்பியதாக பாஜக நிர்வாகிகள் செல்வகுமார், வினோஜ் பி செல்வம் ஆகியோர் மீது கோயில் நிர்வாகம் புகார் அளித்தது.

கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனிடையே, 2023 ஏப்ரல் 13 அன்று சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வன்முறையைத் தூண்டியதாக செல்வகுமார் கைது செய்யப்பட்டார்.

கோவை நகரில் சமூக ஊடகங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவுகளை இடுபவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரத்துறை அமைச்சர் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு இரு குழுக்களுக்கிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் டுவிட்டரில் பதிவுகளை இட்டு வந்தார் செல்வகுமார்.

திமுக ஐடி பிரிவு உறுப்பினர் சுரேஷ் குமார் கோவை நகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாஜக தொழிற்சங்க பிரிவின் மாநில துணைத் தலைவர் செல்வகுமாரை புதன்கிழமை கைது செய்தனர்.

விசாரணையில், 2022ஆம் ஆண்டு அவர் மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருந்தது தெரியவந்தது. அந்த வழக்கில் அவர் முன்ஜாமீனில் வெளியே வந்திருந்தார். செல்வகுமாரின் டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட பதிவுகளும், மறுபதிவுகளும் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தொடர்ந்து அழைப்புகள் வந்ததால் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் அவர் மீதான மோசடி வழக்கு தொடர்பாகவும் செல்வகுமார் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...