கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: கருவூல அதிகாரி கைது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்தியது. ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரிடம் ₹2000 லஞ்சம் வாங்கிய கருவூல அதிகாரி ஏ. ராஜா கைது செய்யப்பட்டார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி திவ்யா தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.



இந்த சோதனையின் போது, கருவூல அலுவலகத்தின் கல்வி பிரிவு கண்காணிப்பாளர் ஏ.ராஜா என்பவர் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரிடம் ₹2000 லஞ்சம் வாங்கியதற்காக கையும் களவுமாக பிடிபட்டார்.



சம்பவத்தின் விவரம்: கோவை கிக்கானி உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிய நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர், கடந்த மே 31 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் தனது கிராஜுவிட்டி தொகையைப் பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூல அலுவலகத்தின் கல்வி பிரிவை அணுகினார். அப்போது, அங்கிருந்த அதிகாரி ஏ.ராஜா, ₹2000 லஞ்சம் கேட்டுள்ளார்.



இது குறித்து சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு முன்னதாகவே தகவல் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஏடிஎஸ்பி திவ்யா தலைமையிலான குழுவினர், சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டரிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் கருவூலப் பிரிவின் கல்வி அதிகாரி ராஜாவை சந்தித்தார். ராஜா அந்த பணத்தை தனது மேஜை டிராயரில் வைக்குமாறு கூறினார். அதன்படி, சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் ₹2000 பணத்தை மேஜை டிராயரில் வைத்தார்.

உடனடியாக, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து, ₹2000 பணத்தை கைப்பற்றினர். லஞ்சம் வாங்கிய அதிகாரி ஏ.ராஜாவை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...