பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் தர்ணா: குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி போராட்டம்

பொள்ளாச்சி அருகே குள்ளக்காபாளையம் நரிக்குறவர் காலனியில் 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபுதேவா என்பவர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார்.


Coimbatore: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனியில் வசித்து வரும் பிரபுதேவா என்பவர், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த 3 மாதங்களாக தங்கள் காலனியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறி இருசக்கர வாகனத்தை நிறுத்தி தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.



வருவாய்த் துறையினர் பிரபுதேவாவிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் கூறியதாவது: "எங்கள் காலனிக்கு மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் எங்களிடம் அடிக்கடி பணம் வாங்குவதோடு மட்டுமல்லாமல் காடை, முயல், கௌதாரி என கேட்டாங்க. அதையும் நாங்க கொடுத்தாச்சு. ஆனால் இதுவரை தண்ணீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் குடிக்க கூட ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். எல்லாம் கொடுத்தும் தண்ணீர் வரவில்லை. இனி சாப்பிட காட்டுக்குள் இருக்கும் மான் கேப்பாங்க, கொடுக்க முடியுமா? பாரஸ்ட் காரங்க சும்மா இருப்பாங்களா? எதை கொடுத்தால் எங்க காலனிக்கு தண்ணீர் கொடுப்பாங்க?"

பிரபுதேவாவின் இந்த வார்த்தைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர் வருவாய்த்துறையினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பிரபுதேவாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...