காங்கேயத்தில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா: அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி வ. ஜெயராமன், தமோதிரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சென்னிமலை சாலையில் அமைந்துள்ள திடலில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஒன்றிய கழக செயலாளருமான என்.எஸ்.என். நடராஜன் தலைமை தாங்கினார். காங்கேயம் நகரச் செயலாளர் வெங்கு ஜி. மணிமாறன் முன்னிலை வகித்தார்.



சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சரும் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி வ. ஜெயராமன் மற்றும் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான தமோதிரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவின் தொடக்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. என்.என்.நடராஜ் வரவேற்புரை ஆற்றினார். வருகை தந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.



முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் தனது உரையில், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சாதனைகளை நினைவுகூர்ந்தார். தற்போதைய கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார். ஜெயலலிதாவின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், கொரோனா காலத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விளக்கினார்.



"அதிமுக கட்சி என்பது தங்கம் போன்றது, ஒவ்வொரு முறையும் சுட்டெரிக்கும் போது தரம் குறையாமல் மேலும் மேலும் மெருகேறும். அதுபோல கண்டிப்பாக அதிமுக அடுத்த தேர்தலில் ஆட்சி அமைக்கும் என்பது சத்தியம்," என்று ஜெயராமன் தனது உரையை முடித்தார்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...