தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ரிலையன்ஸ் உயிர் சக்தி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ரிலையன்ஸ் உயிர் சக்தி நிறுவனம் இடையே உயிர் சக்தி உற்பத்திக்கான தீவனப் பயிர்களை அடையாளம் காண்பதற்காக 20.09.2024 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ரிலையன்ஸ் உயிர் சக்தி நிறுவனம் இடையே 20.09.2024 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் உயிர் சக்தி உற்பத்திக்கான தீவனப் பயிர்களை அடையாளம் காண்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் இரா.தமிழ்வேந்தன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போதைய சூழலில் உயிர் சக்தி ஆற்றலுக்கான தேவை அதிகரித்துள்ளதால், அதிக தாவர உற்பத்தி திறன் மற்றும் புதுபிக்கத்தக்க வளங்கள் கொண்ட தீவனப் பயிர்கள் இந்த தேவையை பூர்த்தி செய்வதற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தின் கீழ் இயங்கும் தீவனப் பயிர் துறையின் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட தீவனப் பயிர் இரகங்கள் அதிக தாவர உற்பத்தி திறன் கொண்டவை. குறிப்பாக, அதிக கரிமப்பொருள் மற்றும் அதிக தாவர உற்பத்தி திறன் கொண்ட கம்பு நேப்பியர் புல், உயிர் சக்தி உற்பத்திக்கு சிறந்த மூலப்பொருளாக கருதப்படுகிறது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பாக பதிவாளர் முனைவர் இரா.தமிழ்வேந்தனும், ரிலையன்ஸ் உயிர் சக்தி நிறுவனத்தின் சார்பாக முதன்மை செயல் அலுவலர் பசீர் அகமது சிராசியும் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்வில் பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் முனைவர் ஆர்.இரவிகேசவன், தீவனப் பயிர் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஆர். புஷ்பம், தீவனப் பயிர் துறையின் விஞ்ஞானிகள், ஆர்.பி.இ.எல் ஹைதராபாத் முதன்மை மேலாளர், ஆர்.பி.இ.எல் மும்பை திரு ஜி.ஆனந்தன், பாலாஜி பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, உயிர் சக்தி ஆற்றல் உற்பத்திக்கு ஏற்ற தீவனப் பயிர்களை எவ்வாறு பயிர் செய்ய வேண்டும் என்ற தொழில்நுட்பத்தை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ரிலையன்ஸ் உயிர் சக்தி நிறுவனத்திற்கு வழங்கும்.

Newsletter

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...