பொள்ளாச்சி அருகே 108 ஆம்புலன்ஸில் பிரசவம்: தாயும் சேயும் நலமுடன் மருத்துவமனையில் அனுமதி

பொள்ளாச்சி அருகே ஜலத்தூரில் 108 ஆம்புலன்ஸில் பெண் பிரசவம் பார்த்து குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் ஊழியர்களின் துரித செயல்பாட்டால் தாயும் சேயும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஜலத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலசந்திரன் மனைவி காயத்திரிக்கு இன்று காலை வீட்டில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தங்கவேல் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் விரைவாக சம்பவ இடத்திற்கு சென்றனர். காயத்திரியை ஆம்புலன்ஸில் ஏற்றி பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில், பிரசவ வலி அதிகரித்தது.

நிலைமையின் அவசரத்தை உணர்ந்த மருத்துவ உதவியாளர் மணிகண்டன், ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்தார். அவரது சிகிச்சையின் பலனாக, சிறிது நேரத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமயோசிதமாக செயல்பட்டு தாய் மற்றும் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுனர் தங்கவேல் மற்றும் மருத்துவ உதவியாளர் மணிகண்டன் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...