பொள்ளாச்சி அருகே 108 ஆம்புலன்ஸில் பிரசவம்: தாயும் சேயும் நலமுடன் மருத்துவமனையில் அனுமதி

பொள்ளாச்சி அருகே ஜலத்தூரில் 108 ஆம்புலன்ஸில் பெண் பிரசவம் பார்த்து குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் ஊழியர்களின் துரித செயல்பாட்டால் தாயும் சேயும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஜலத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலசந்திரன் மனைவி காயத்திரிக்கு இன்று காலை வீட்டில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தங்கவேல் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் விரைவாக சம்பவ இடத்திற்கு சென்றனர். காயத்திரியை ஆம்புலன்ஸில் ஏற்றி பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில், பிரசவ வலி அதிகரித்தது.

நிலைமையின் அவசரத்தை உணர்ந்த மருத்துவ உதவியாளர் மணிகண்டன், ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்தார். அவரது சிகிச்சையின் பலனாக, சிறிது நேரத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமயோசிதமாக செயல்பட்டு தாய் மற்றும் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுனர் தங்கவேல் மற்றும் மருத்துவ உதவியாளர் மணிகண்டன் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...