பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்

கோவை சவுரிபாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.


Coimbatore: பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கை மண்டலில் சவுரிபாளையம் பகுதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் இன்று (செப்டம்பர் 22) மேளதாளங்களுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிங்கை மண்டல உறுப்பினர் சேர்ப்பு பொறுப்பாளர் ரமேஷ்குமார், SRS.ராஜா ஆகியோர் தலைமையில் வழிபாடு நடைபெற்றது. மாவட்ட உறுப்பினர் சேர்ப்பு பொறுப்பாளர் RT.முரளி, மண்டல உறுப்பினர் சேர்ப்பு பொறுப்பாளர்கள் பைலட் முருகேசன், பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



தொடர்ந்து, உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் ஜே.ரமேஷ் குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும், மாவட்ட துணைத் தலைவர் M.R.சரவணன், ராஜசேகர், அசோக்குமார், ராஜேந்திர பிரசாத், காட்டன்சுரேஷ், சக்தி, கணேசன், பூபேஷ், சொர்ண அரவிந்த், கண்ணன், வில்லியம்ஸ், மகேந்திரன் மற்றும் பல தாமரை சொந்தங்கள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வு பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நடைபெற்றதோடு, பாஜகவின் உறுப்பினர் சேர்க்கையையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது. கோவில் வளாகத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...