கோவையில் சட்டவிரோத மண் கடத்தல்: ஆட்சியர் திடீர் ஆய்வு - நடவடிக்கை எடுக்க உத்தரவு

கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மண் கடத்தல் மற்றும் செங்கல் தயாரிப்பு குறித்த புகார்களை அடுத்து, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மண் கடத்தி செங்கல் தயாரிப்பது தொடர்பாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாதி நேற்று (செப்டம்பர் 22) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பேரூர் வட்டம் ஆலந்துறை, காளிமங்கலம், தேவராயபுரம், வால்கரடு மற்றும் மதுக்கரை வட்டம் கரடிமடை ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மண் எடுத்து செங்கல் உற்பத்தி நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக ஒரு சமூக ஆர்வலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேற்கு தொடர்ச்சி மலை காணாமல் போகும் அபாயம் குறித்து கவலை தெரிவித்தனர். சட்டவிரோத மண் கடத்தல்காரர்களை உடனடியாக கைது செய்து, அவர்களின் இயந்திரங்களை பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் மேற்கொண்ட திடீர் ஆய்வின் போது, குறிப்பிட்ட பகுதிகளில் முறைகேடாக மண் எடுப்பதும், சட்டவிரோதமாக செங்கல் தயாரிப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாதி பின்வரும் உத்தரவுகளை பிறப்பித்தார்:

1. சட்டவிரோத மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வேண்டும்.

2. மண் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

3. உரிய அனுமதியின்றி கைகளால் செங்கல் தயாரிப்பதை தடுக்க, சூளைகளுக்கு சீல் வைக்க வேண்டும்.

இந்த உத்தரவுகளை செயல்படுத்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். சட்டவிரோத மண் கடத்தல் மற்றும் செங்கல் உற்பத்தியை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...