கோவையில் போலி பத்திரிகையாளர்களை அடையாளம் காண வாட்ஸ்அப் எண் அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர்

கோவையில் போலி பத்திரிகையாளர்கள் மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்துள்ளன. இதனை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்ணை அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடி செய்பவர்களை அடையாளம் காண மாவட்ட நிர்வாகம் வாட்ஸ்அப் எண்ணை அறிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் சிலர் அரசு அதிகாரிகளை மிரட்டுவதும், அவர்கள் குறித்து அவதூறு செய்திகளை வெளியிடுவதும் தெரிய வந்துள்ளது. மேலும், உயர் அதிகாரிகளை நன்கு தெரியும் என்று கூறி மக்களிடம் மனுக்கள் மற்றும் பணத்தை பெற்றுக் கொள்கின்றனர்.

அரசு அலுவலகங்கள் முன்பு போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய நபர்களை கண்காணிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி கண்டறியப்படும் போது அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பத்திரிகையாளர் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள் 94980-42423 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவல்களை அனுப்பலாம். இந்த எண்ணுக்கு வரும் புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...