கோவையில் போலி பத்திரிகையாளர்களை அடையாளம் காண வாட்ஸ்அப் எண் அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர்

கோவையில் போலி பத்திரிகையாளர்கள் மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்துள்ளன. இதனை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்ணை அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடி செய்பவர்களை அடையாளம் காண மாவட்ட நிர்வாகம் வாட்ஸ்அப் எண்ணை அறிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் சிலர் அரசு அதிகாரிகளை மிரட்டுவதும், அவர்கள் குறித்து அவதூறு செய்திகளை வெளியிடுவதும் தெரிய வந்துள்ளது. மேலும், உயர் அதிகாரிகளை நன்கு தெரியும் என்று கூறி மக்களிடம் மனுக்கள் மற்றும் பணத்தை பெற்றுக் கொள்கின்றனர்.

அரசு அலுவலகங்கள் முன்பு போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய நபர்களை கண்காணிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி கண்டறியப்படும் போது அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பத்திரிகையாளர் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள் 94980-42423 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவல்களை அனுப்பலாம். இந்த எண்ணுக்கு வரும் புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...