யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எஸ்.பி.வேலுமணி ஆறுதல் மற்றும் நிதி உதவி

கோவையில் யானை தாக்கி உயிரிழந்த தேவராஜ் மற்றும் கார்த்திக் குடும்பத்தினரை தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், நிதி உதவிகளையும் வழங்கினார்.

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அட்டுகல் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்ற கூலி தொழிலாளி கடந்த 13 ஆம் தேதி அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில், அப்பகுதியில் இருட்டில் நின்றுகொண்டிருந்த யானை தீடீரென தாக்கியதில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். உயிரிழந்த தேவராஜின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் நிதி உதவியையும் வழங்கினார் எஸ்.பி.வேலுமணி.

அதேபோல், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விராலியூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கார்த்திக், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறையினருடன் இணைந்து ஊருக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார். அப்போது எதிர்பாராத விதமாக யானை கார்த்திக்கைத் தாக்கத் துவங்கியது. இதில் படுகாயமடைந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகனை இழந்து வாழும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவியையும் வழங்கினார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...