கோவை மாநகராட்சி ஆணையாளர் பாதாள சாக்கடை மற்றும் சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் வார்டு 1-ல் பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும், வார்டு 5-ல் சாலை சீரமைப்பு பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் IAS, இன்று (செப்டம்பர் 20) மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அடிப்படை கட்டமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

முதலில், வடக்கு மண்டலத்தின் வார்டு எண் 1-க்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் மற்றும் கேப்டவுன் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஆணையாளர் பார்வையிட்டார். இப்பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், மாமன்ற உறுப்பினர் கற்பகம், மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் ஜெயின்ராஜ், சுகாதார ஆய்வாளர் பவுன்ராஜ் மற்றும் பிற மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.



அடுத்ததாக, ஆணையாளர் கிழக்கு மண்டலத்தின் வார்டு எண் 5-க்குட்பட்ட விஸ்வாசபுரம் பகுதிக்குச் சென்றார். அங்கு நடைபெறும் சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த அவர், இப்பணிகளையும் விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர் முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா, மாமன்ற உறுப்பினர் நவீன்குமார், மண்டல சுகாதார அலுவலர் விஜயகுமார், உதவி பொறியாளர் கணேசன் மற்றும் பிற மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...