மேட்டுப்பாளையம் நகராட்சியில் நாளை முதல் சீரான குடிநீர் விநியோகம் - நகராட்சி ஆணையர் அறிவிப்பு

மேட்டுப்பாளையத்தில் மூன்று நாள் குடிநீர் விநியோக தடைக்குப் பிறகு, நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் வழங்கப்படும் என நகராட்சி ஆணையர் அமுதா அறிவித்துள்ளார். பராமரிப்பு பணிகள் இன்று நிறைவடையும்.


Coimbatore: மேட்டுப்பாளையம் நகராட்சியில் நாளை (செப்டம்பர் 21) முதல் சீரான முறையில் குடிநீர் விநியோகிக்கப்படும் என நகராட்சி ஆணையர் அமுதா தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. பவானி ஆற்றிலிருந்து மூன்று குடிநீர் திட்டங்கள் மூலம் தினமும் 1 கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, சாமண்ணா நீரேற்று நிலையத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்யப்படுகிறது.

சாமண்ணா தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள மூன்று குடிநீர் திட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், செப்டம்பர் 18 முதல் 20 வரை மூன்று நாட்களுக்கு மேட்டுப்பாளையம் நகரில் குடிநீர் வினியோகம் இருக்காது என நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், நகராட்சி ஆணையர் அமுதா நேற்று (செப்டம்பர் 19) வெளியிட்ட அறிக்கையில், "சுத்திகரிப்பு நிலையத்தில் சேரும் சகதி அதிகளவில் படிந்துள்ளது. அவற்றை அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதேபோன்று நகரில் குடிநீர் குழாய்களில் உள்ள உடைப்புகள் மற்றும் தண்ணீர் கசியும் இடங்களில் குழாய்கள் மாற்றும் பணிகளும், உடைப்புகள் சரி செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன," என்று தெரிவித்தார்.

மேலும், "அனைத்து பணிகளும் இன்று (செப்டம்பர் 20) முடிக்கப்படும். நாளை (செப்டம்பர் 21) முதல் பொதுமக்களுக்கு வழக்கம் போல் குடிநீர் சீரான முறையில் வழங்கப்படும்," என்று அவர் உறுதியளித்தார்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...