மேட்டுப்பாளையம் நகராட்சியில் நாளை முதல் சீரான குடிநீர் விநியோகம் - நகராட்சி ஆணையர் அறிவிப்பு

மேட்டுப்பாளையத்தில் மூன்று நாள் குடிநீர் விநியோக தடைக்குப் பிறகு, நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் வழங்கப்படும் என நகராட்சி ஆணையர் அமுதா அறிவித்துள்ளார். பராமரிப்பு பணிகள் இன்று நிறைவடையும்.


Coimbatore: மேட்டுப்பாளையம் நகராட்சியில் நாளை (செப்டம்பர் 21) முதல் சீரான முறையில் குடிநீர் விநியோகிக்கப்படும் என நகராட்சி ஆணையர் அமுதா தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. பவானி ஆற்றிலிருந்து மூன்று குடிநீர் திட்டங்கள் மூலம் தினமும் 1 கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, சாமண்ணா நீரேற்று நிலையத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்யப்படுகிறது.

சாமண்ணா தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள மூன்று குடிநீர் திட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், செப்டம்பர் 18 முதல் 20 வரை மூன்று நாட்களுக்கு மேட்டுப்பாளையம் நகரில் குடிநீர் வினியோகம் இருக்காது என நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், நகராட்சி ஆணையர் அமுதா நேற்று (செப்டம்பர் 19) வெளியிட்ட அறிக்கையில், "சுத்திகரிப்பு நிலையத்தில் சேரும் சகதி அதிகளவில் படிந்துள்ளது. அவற்றை அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதேபோன்று நகரில் குடிநீர் குழாய்களில் உள்ள உடைப்புகள் மற்றும் தண்ணீர் கசியும் இடங்களில் குழாய்கள் மாற்றும் பணிகளும், உடைப்புகள் சரி செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன," என்று தெரிவித்தார்.

மேலும், "அனைத்து பணிகளும் இன்று (செப்டம்பர் 20) முடிக்கப்படும். நாளை (செப்டம்பர் 21) முதல் பொதுமக்களுக்கு வழக்கம் போல் குடிநீர் சீரான முறையில் வழங்கப்படும்," என்று அவர் உறுதியளித்தார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...