கோவை நஞ்சப்பா சாலையில் இளம்பெண் ஓட்டிய மின்சார ஸ்கூட்டர் மோதி முதியவர் உயிரிழப்பு

கோவை நஞ்சப்பா சாலையில் நடந்து சென்ற 71 வயது முதியவர் மீது மின்சார ஸ்கூட்டர் மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். 19 வயது இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை நஞ்சப்பா சாலையில் நேற்று (செப்டம்பர் 19) நடந்து சென்ற முதியவர் மீது மின்சார ஸ்கூட்டர் மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் ரோடு சேரன் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி (71) என்பவர் நஞ்சப்பா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென சுப்பிரமணி மீது மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணி தலையில் பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக சுப்பிரமணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மின்சார ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர் கோவை ராம்நகர் சாஸ்திரி ரோட்டைச் சேர்ந்த அஷ்விதா (19) என்ற இளம்பெண் என்பது தெரியவந்தது. இதையடுத்து அஷ்விதா மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் கோவை நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டிகள் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும் என்றும், பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...