சிங்காநல்லூர் மேம்பாலத்திற்கு அனுமதி: விரைவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்

கோவை சிங்காநல்லூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய மேம்பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. டெண்டர் விடப்பட்டவுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சிங்காநல்லூர் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சாலை வசதிகளை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சிங்காநல்லூரில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது டெண்டர் விடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. டெண்டர் விடப்பட்டவுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. இந்த மேம்பாலம் திருச்சி சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே பல மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. காந்திபுரத்தில் இரண்டு அடுக்கு மேம்பாலம், ராமநாதபுரம் பகுதியில் மேம்பாலம், மற்றும் சமீபத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்த உக்கடம் மேம்பாலம் ஆகியவை இதில் அடங்கும். மேலும், அவிநாசி சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கோவை மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், சிங்காநல்லூரில் புதிய மேம்பாலம் கட்டப்படுவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மேம்பாலம் கட்டப்படுவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...