உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி: அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கோவையில் பேரூர் ஆதினத்தை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார். மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்ப்பதாகவும் கூறினார்.



Coimbatore: கோவை பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாரை நேரில் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், கலைஞரின் 100 ரூபாய் நாணயத்தை வழங்கி ஆசி பெற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பேரூர் ஆதினம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும், செம்மொழி நடத்துவதற்கு உறுதுணையாகவும் இருந்ததாகத் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினின் சார்பாகவும் வாழ்த்து தெரிவித்ததாக கூறிய அமைச்சர், "ஒட்டுமொத்த தமிழ் உணர்வோடு இருக்கக்கூடிய அனைவரையும் ஒருங்கிணைப்பது தான் தமிழர் கலாச்சாரம். தமிழோடு இருக்கக்கூடிய பேரூர் ஆதினம் இருக்க வேண்டும்" என்றார்.



மத்திய அரசு கொண்டு வரும் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஆரம்பம் முதலே எதிர்த்து வருவதாகவும், ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் ஜமாத்தின் ஒருமித்த கருத்தும் இந்த மசோதாவிற்கு எதிராக உள்ளதாகவும் அமைச்சர் கூறினார். "மத நல்லிணக்கத்திற்கு வேற்றுமையில் ஒற்றுமை காணும் வேலையில் மத்திய அரசு இந்த சட்டம் மூலம் ஒற்றுமையில் வேற்றுமையை காண வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இது கவலை அளிப்பதாக உள்ளது," என்றார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "கலைஞர் உரிய நேரத்தில் உள்ளாட்சித்துறையையும், துணை முதல்வர் பதவியையும் ஸ்டாலினுக்கு வழங்கினார். உழைப்பு என்றால் அது ஸ்டாலின் தான் என்று கலைஞர் சொன்னார். அதேபோல் உழைப்பிற்கு எடுத்துக்காட்டாக ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் செல்லப்பிள்ளை, கலைஞரின் பேரப்பிள்ளை, மாமன்னன் உதயநிதி ஸ்டாலினும் இன்று தமிழகம் முழுவதும் இளைஞர்களை ஒன்று சேர்த்து கழகத்தை வலுப்படுத்துகிறார். அந்த உழைப்புக்கு ஏற்றவாறு உரிய நேரத்தில் கலைஞரைப் போல ஸ்டாலினும் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுப்பார்," என்று தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...