கோவை அன்னூர் அருகே குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கோவில் பாளையம் பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட ரவீந்திரன் என்பவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கோவில் பாளையம் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

அண்மையில் கோவில் பாளையம் பகுதியில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி செய்ததாக ஒரு கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டது. அதில் ரவீந்திரன் என்பவரும் ஒருவர். இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு பின்னர் வெளி மாநிலங்களுக்கு தப்பி சென்று பதுங்கி இருந்துள்ளார்.

கடந்த மாதம் கோவில் பாளையம் பகுதியில் வழிப்பறி செய்து விட்டு சிம்லா சென்று பதுங்கி இருந்த ரவீந்திரனை கோவில் பாளையம் போலீசார் அங்கு சென்று கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்தனர். அப்போது போலீசிடம் இருந்து தப்ப முயன்று பள்ளத்தில் விழுந்த ரவீந்திரனுக்கு மாவு கட்டு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவீந்திரன் மீது கோவில் பாளையம் போலீசார் தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த தகவல் சிறையில் உள்ள ரவீந்திரனுக்கு கோப்புகளாக வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...