கோவை அன்னூர் அருகே குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கோவில் பாளையம் பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட ரவீந்திரன் என்பவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கோவில் பாளையம் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

அண்மையில் கோவில் பாளையம் பகுதியில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி செய்ததாக ஒரு கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டது. அதில் ரவீந்திரன் என்பவரும் ஒருவர். இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு பின்னர் வெளி மாநிலங்களுக்கு தப்பி சென்று பதுங்கி இருந்துள்ளார்.

கடந்த மாதம் கோவில் பாளையம் பகுதியில் வழிப்பறி செய்து விட்டு சிம்லா சென்று பதுங்கி இருந்த ரவீந்திரனை கோவில் பாளையம் போலீசார் அங்கு சென்று கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்தனர். அப்போது போலீசிடம் இருந்து தப்ப முயன்று பள்ளத்தில் விழுந்த ரவீந்திரனுக்கு மாவு கட்டு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவீந்திரன் மீது கோவில் பாளையம் போலீசார் தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த தகவல் சிறையில் உள்ள ரவீந்திரனுக்கு கோப்புகளாக வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...