திமுக தொண்டர்கள் உழைக்க, கலைஞர் குடும்பம் பிழைக்கும் - தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

கோவையில் பாஜக மாநில முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திமுகவின் குடும்ப அரசியலை கடுமையாக விமர்சித்தார். திமுக தொண்டர்கள் உழைக்க, கலைஞர் குடும்பம் பிழைக்கும் என்று குற்றம்சாட்டினார்.


Coimbatore: கோவையில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பாஜக மாநில முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்களிடம் பேசினார். அவர் திமுகவின் குடும்ப அரசியலை கடுமையாக விமர்சித்தார்.

"திமுக நூற்றாண்டு விழா கொண்டாடும் போது உதயநிதி தலைமை, 125-ம் ஆண்டு விழாவின் போது அவரது மகன் தலைமை என திமுக தொண்டர்கள் உழைத்து கொண்டே இருக்க வேண்டும். கலைஞர் குடும்பம் பிழைத்து கொண்டே இருக்கும்," என்று தமிழிசை குற்றம்சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், "பவள விழா தொண்டர்களுக்காக நடத்தப்பட்டது அல்ல. உதயநிதி முடிசூடுவதற்கான ஆரம்ப விழா. திமுக-வின் நூற்றாண்டு விழா கொண்டாடும் போது உதயநிதி தலைமை, 125-வது ஆண்டு விழாவின் போது உதயநிதியின் மகன் தலைமை என திமுகவில் தொண்டர்கள் உழைத்து கொண்டே இருக்க வேண்டும். அதை கொண்டு கலைஞர் குடும்பம் பிழைத்துக்கொண்டே இருக்கும்," என்றார்.

தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் தமிழிசை விமர்சனம் செய்தார். "வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை முதல்வர் ஈர்த்து வருவதாக தமிழக அரசு கூறி வரும் நிலையில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்கிறது. கமிஷன், ஊழல் என கம்யூனிஸ்ட்கள் உள்ள வரை தமிழகத்தில் தொழிற்சாலைகளை சிறப்பான முறையில் நடத்த முடியாது," என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், குழந்தைகளுக்கு அரசு வழங்கும் முட்டைகள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், கல்வித்துறையில் முறைகேடுகள் நடப்பதாகவும் தமிழிசை குற்றம்சாட்டினார். இவை குறித்து கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை வரவேற்றதாகவும், இதனால் மக்களின் நேரமும் வரிப்பணமும் சேமிக்கப்படும் என்றும் தமிழிசை கூறினார். பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் சேவை நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...