திமுக தொண்டர்கள் உழைக்க, கலைஞர் குடும்பம் பிழைக்கும் - தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

கோவையில் பாஜக மாநில முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திமுகவின் குடும்ப அரசியலை கடுமையாக விமர்சித்தார். திமுக தொண்டர்கள் உழைக்க, கலைஞர் குடும்பம் பிழைக்கும் என்று குற்றம்சாட்டினார்.


Coimbatore: கோவையில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பாஜக மாநில முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்களிடம் பேசினார். அவர் திமுகவின் குடும்ப அரசியலை கடுமையாக விமர்சித்தார்.

"திமுக நூற்றாண்டு விழா கொண்டாடும் போது உதயநிதி தலைமை, 125-ம் ஆண்டு விழாவின் போது அவரது மகன் தலைமை என திமுக தொண்டர்கள் உழைத்து கொண்டே இருக்க வேண்டும். கலைஞர் குடும்பம் பிழைத்து கொண்டே இருக்கும்," என்று தமிழிசை குற்றம்சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், "பவள விழா தொண்டர்களுக்காக நடத்தப்பட்டது அல்ல. உதயநிதி முடிசூடுவதற்கான ஆரம்ப விழா. திமுக-வின் நூற்றாண்டு விழா கொண்டாடும் போது உதயநிதி தலைமை, 125-வது ஆண்டு விழாவின் போது உதயநிதியின் மகன் தலைமை என திமுகவில் தொண்டர்கள் உழைத்து கொண்டே இருக்க வேண்டும். அதை கொண்டு கலைஞர் குடும்பம் பிழைத்துக்கொண்டே இருக்கும்," என்றார்.

தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் தமிழிசை விமர்சனம் செய்தார். "வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை முதல்வர் ஈர்த்து வருவதாக தமிழக அரசு கூறி வரும் நிலையில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்கிறது. கமிஷன், ஊழல் என கம்யூனிஸ்ட்கள் உள்ள வரை தமிழகத்தில் தொழிற்சாலைகளை சிறப்பான முறையில் நடத்த முடியாது," என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், குழந்தைகளுக்கு அரசு வழங்கும் முட்டைகள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், கல்வித்துறையில் முறைகேடுகள் நடப்பதாகவும் தமிழிசை குற்றம்சாட்டினார். இவை குறித்து கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை வரவேற்றதாகவும், இதனால் மக்களின் நேரமும் வரிப்பணமும் சேமிக்கப்படும் என்றும் தமிழிசை கூறினார். பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் சேவை நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...