கூடலூர் நகராட்சியில் DRO திடீர் ஆய்வு: காலை உணவுத் திட்டம், சுகாதார நிலையம் மற்றும் குடிநீர் வசதிகளை பரிசோதித்தார்

கூடலூர் நகராட்சியில் DRO டாக்டர் ஷர்மிளா திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், துணை சுகாதார நிலையம், குடிநீர் வசதிகள் மற்றும் பள்ளி கழிப்பிடங்களை பரிசோதித்தார்.


கோவை: கூடலூர் நகராட்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) டாக்டர் ஷர்மிளா இன்று (செப்டம்பர் 19) திடீர் ஆய்வு மேற்கொண்டார். "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் நடைபெறும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



DRO டாக்டர் ஷர்மிளா முதலில் கூடலூர் நகராட்சியின் தெற்கு பாளையத்தில் செயல்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் உணவு கூடத்தை பார்வையிட்டார். அங்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து விசாரித்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, அங்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அப்பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டியை ஆய்வு செய்த DRO, குடிநீரின் தன்மை குறித்து விசாரித்தார். மேலும், அருகிலுள்ள தொடக்கப்பள்ளியின் கழிப்பிடங்களையும் பார்வையிட்டு, அவற்றின் நிலை குறித்து கேள்விகள் எழுப்பினார்.



இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் மனோகரன், துணை தலைவர் ராஜேந்திரன், நகராட்சி கவுன்சிலர்களான முருகானந்தம், துரை செந்தில், மாடசாமி, பாலசுப்பிரமணியம், ஜனார்த்தனன், பேங்க் முருகேசன், எஸ் ஆர் பி பழனிச்சாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...