கூடலூர் நகராட்சியில் DRO திடீர் ஆய்வு: காலை உணவுத் திட்டம், சுகாதார நிலையம் மற்றும் குடிநீர் வசதிகளை பரிசோதித்தார்

கூடலூர் நகராட்சியில் DRO டாக்டர் ஷர்மிளா திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், துணை சுகாதார நிலையம், குடிநீர் வசதிகள் மற்றும் பள்ளி கழிப்பிடங்களை பரிசோதித்தார்.


கோவை: கூடலூர் நகராட்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) டாக்டர் ஷர்மிளா இன்று (செப்டம்பர் 19) திடீர் ஆய்வு மேற்கொண்டார். "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் நடைபெறும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



DRO டாக்டர் ஷர்மிளா முதலில் கூடலூர் நகராட்சியின் தெற்கு பாளையத்தில் செயல்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் உணவு கூடத்தை பார்வையிட்டார். அங்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து விசாரித்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, அங்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அப்பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டியை ஆய்வு செய்த DRO, குடிநீரின் தன்மை குறித்து விசாரித்தார். மேலும், அருகிலுள்ள தொடக்கப்பள்ளியின் கழிப்பிடங்களையும் பார்வையிட்டு, அவற்றின் நிலை குறித்து கேள்விகள் எழுப்பினார்.



இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் மனோகரன், துணை தலைவர் ராஜேந்திரன், நகராட்சி கவுன்சிலர்களான முருகானந்தம், துரை செந்தில், மாடசாமி, பாலசுப்பிரமணியம், ஜனார்த்தனன், பேங்க் முருகேசன், எஸ் ஆர் பி பழனிச்சாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...