போதைப் பொருள் கடத்தலுக்கு அரசு அதிகாரிகள் துணை போவதாக வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தமது முகநூல் பக்கத்தில் 850 தமிழக காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தலுக்கு துணைபோவதாக குற்றம்சாட்டியுள்ளார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக காவல்துறை உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் போதைப் பொருள் கடத்தலுக்கு துணைபோவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு, 850 தமிழக காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் துணைபோனதாக வெளியாகியுள்ள செய்தி தமிழக மக்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் Stalin அவர்களை நேரடியாக விமர்சித்துள்ள வானதி சீனிவாசன், "தமிழகம் போதையின் பிடியில் சிக்கியிருக்க, போதையில்லா தமிழகத்தை உருவாக்குவேன் என்று நீங்கள் எடுத்த உறுதிமொழி என்னவாயிற்று?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "தமிழகத்தில் ஒருபுறம் 'கஞ்சா வேட்டை' என்ற நாடகத்தை நடத்தும் உங்கள் அரசு, மறுபுறம் போதைப்பொருள் கடத்தல்களுக்கு துணை நிற்கிறதா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, தமிழகத்தில் பெருகிவரும் இந்த போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டுமெனவும், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் 850 அரசு அதிகாரிகளையும் விசாரித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக மக்கள் சார்பாக வலியுறுத்தியுள்ளார் வானதி சீனிவாசன்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...