கோவை ஆர்.எஸ்.புரத்தில் போலி மருத்துவர் தம்பதி கைது: நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தவறான சிகிச்சை

கோவை ஆர்.எஸ்.புரத்தில் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவர் தம்பதி கைது செய்யப்பட்டனர். சிறுவனின் தாத்தா அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம், ராபர்ட்சன் ரோட்டில் உள்ள அஜய் நீரோ கிளினிக் என்ற மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவர் தம்பதி கைது செய்யப்பட்டனர்.

சென்னை, அம்பத்தூர், கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 70) என்பவரின் 7 வயது பேரன் இக்சிட் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அஜய் நீரோ கிளினிக்கிற்கு ராமச்சந்திரன் தனது பேரனை அழைத்து வந்திருந்தார்.

சிறுவனை பரிசோதித்த டாக்டர் பாலாஜி சக்கரவர்த்தி, அவரை முழுமையாக குணப்படுத்துவதாகக் கூறினார். இதை நம்பி ராமச்சந்திரன் முதல் கட்டமாக ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மருத்துவ கட்டணமாக செலுத்தினார். ஆனால், சிகிச்சைக்குப் பின் சிறுவனின் காலில் வலி ஏற்பட்டது.

பின்னர், அந்த மருத்துவமனை நிபுணர்கள், பூமார்க்கெட் சாலையில் உள்ள மற்றொரு மருத்துவமனையை பரிந்துரைத்தனர். அங்கு சென்று சிகிச்சை எடுத்தபோது, சிறுவனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, ராமச்சந்திரன் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் செப்டம்பர் 16 அன்று புகார் அளித்தார். அதன் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் பாலாஜி சக்கரவர்த்தி மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோரை செப்டம்பர் 17 அன்று கைது செய்தனர்.

விசாரணையில், பாலாஜி சக்கரவர்த்தி பிசியோதெரபிஸ்ட்டாகவும், செல்வி நியூரோ தெரபிஸ்ட்டாகவும் இருந்து கொண்டு மருத்துவராக நடித்துள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த போலி மருத்துவர் தம்பதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...