பெரியாரின் 146வது பிறந்தநாள்: கோவையில் திமுகவினர் மரியாதை

கோவை காந்திபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர். ஆனைமலையில் திமுக சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


Coimbatore: பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு திமுக மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை இன்று (செப்.17) செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன், திமுக பகுதி கழக செயலாளர் பசுபதி, வழக்கறிஞர் கணேஷ்குமார், அன்புசெழியன் மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

அதேநேரம், கோவை மாவட்டம் ஆனைமலை முக்கோணத்தில் திமுக கட்சியின் சார்பாக பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு ஆனைமலை நகரச் செயலாளர் டாக்டர் ஏ.பி.செந்தில்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆனைமலை நிகழ்வில் நகரத் துணைச் செயலாளர் ஏ.அபுதாஹீர் மற்றும் பல உடன்பிறப்புகள் திரளாகக் கலந்து கொண்டனர். இவ்வாறு கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...