பெரியாரின் 146வது பிறந்தநாள்: கோவையில் திமுகவினர் மரியாதை

கோவை காந்திபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர். ஆனைமலையில் திமுக சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


Coimbatore: பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு திமுக மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை இன்று (செப்.17) செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன், திமுக பகுதி கழக செயலாளர் பசுபதி, வழக்கறிஞர் கணேஷ்குமார், அன்புசெழியன் மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

அதேநேரம், கோவை மாவட்டம் ஆனைமலை முக்கோணத்தில் திமுக கட்சியின் சார்பாக பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு ஆனைமலை நகரச் செயலாளர் டாக்டர் ஏ.பி.செந்தில்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆனைமலை நிகழ்வில் நகரத் துணைச் செயலாளர் ஏ.அபுதாஹீர் மற்றும் பல உடன்பிறப்புகள் திரளாகக் கலந்து கொண்டனர். இவ்வாறு கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...