கோவையில் 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' மாரத்தான் - குழந்தைகளின் இதய நோய் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக நடைபெறுகிறது

கோவையில் GKNM மருத்துவமனை சார்பில் செப்டம்பர் 29 அன்று 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' மாரத்தான் நடைபெறுகிறது. குழந்தைகளின் இதய நோய் மற்றும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.


Coimbatore: கோயம்புத்தூர் கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை (GKNM) சார்பாக உலக இருதய தினமான செப்டம்பர் 29 அன்று 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' என்ற மாரத்தானின் இரண்டாவது பதிப்பு நடைபெறவுள்ளது. இந்த மாரத்தான் இதயக் குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் நடத்தப்படுகிறது.

செப்டம்பர் மாதம் குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகவும், செப்டம்பர் 29 உலக இதய தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. பொதுமக்கள், குழந்தைகள் புற்றுநோய் மற்றும் குழந்தைகளின் இதய குறைபாடுகள் குறித்து போதிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக, அன்று காலை 5:30 மணிக்கு கோவை, பாப்பநாயக்கன்பாளையம், மணி மேல்நிலைப் பள்ளியில் இந்த மாரத்தான் நடைபெறவுள்ளது.

மாரத்தான் மூன்று வெவ்வேறு பிரிவுகளில் நடைபெறுகிறது:

1. 1 & 3 கி.மீ. - எல்லா வயதினருக்கும். குழந்தைகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் ஒன்றாக ஓடலாம்.

2. 5 கி.மீ. - 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கும், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கும்.

3. 10 கி.மீ. - 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொள்ளலாம்.

5 மற்றும் 10 கிமீ பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, ரொக்க பரிசு தொகை ரூ.75,000 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாரத்தான் கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், LMW, Lakshmi Mills Co. Ltd மற்றும் Lakshmi Card Clothing ஆகிய நிறுவனங்களும் இணைந்து நடத்துகின்றன.

செப்டம்பர் 16, 2023 அன்று GKNM மருத்துவமனை வளாகத்தில் மாரத்தான் டி-சர்ட் மற்றும் பதக்கத்தின் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது, GKNMH இன் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசுவாமி பேசுகையில், "ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் 2022 இன் முதல் பதிப்பில், 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 29 குழந்தைகள், இந்த மரத்தானில் கிடைத்த நிதி மூலம் பயனடைந்தனர்" என்றார்.

மேலும் அவர், "KNC அறக்கட்டளையின் ஒரு பிரிவான GKNM மருத்துவமனை, கோயம்புத்தூர் நகரத்தில் குழந்தைகளுக்கான இருதய பராமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கான புற்றுநோயியல் சிகிச்சையில் முன்னோடியாக உள்ளது. இந்த இரண்டு மருத்துவ பிரிவுகளுமே, நவீன தொழிநுட்பங்களுடனும், உலகத்தரமான மருத்துவக் கருவிகளுடனும் கட்டமைக்கப்பட்டுள்ளன" என்றும் குறிப்பிட்டார்.

கடந்த முறை போலவே இம்முறையும், GKNM மருத்துவமனையில் புற்றுநோய் மற்றும் இருதய குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகள், இந்த மரத்தானில் கலந்து கொள்ள உள்ளனர். டாக்டர் ரகுபதி வேலுசாமி, "குணமடைந்த குழந்தைகள், எல்லா விதங்களிலும், மற்ற குழந்தைகள் போலவே பிற்காலத்தில் பல்வேறு துறைகளில் பல சாதனைகள் புரிந்து வெற்றியாளர்களாக திகழ முடியும். எனவே பெற்றோர்கள், பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு எந்த ஒரு தயக்கமுமின்றி ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

பொதுமக்கள் அனைவரும் ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தானில் பதிவுசெய்து ஆதரிக்கவும், குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய ticketprix.com ஐ பயன்படுத்தலாம் அல்லது 97900 72303 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...