கோவை அவினாசி சாலையில் அண்ணாவின் 116வது பிறந்தநாள்: அதிமுக சார்பில் சிலைக்கு மாலை அணிவிப்பு

கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.


Coimbatore: கோவை அவினாசி சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 15) நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாநகர் மாவட்ட அதிமுக கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், கழக தலைமை நிலைய செயலாளரும், கழக கொறடாவும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார். அவருடன் தேமுதிக பிரதிநிதி விஜய்பிரபாகரன், கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே. அர்ஜுனன், கோவை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கே.ஆர். ஜெயராம் ஆகியோரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.



இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்களான செம்மலை வேலுச்சாமி, பீளமேடு துரைசாமி ஆகியோருடன், பார்த்திபன், சிங்கை பாலன், பொன்னுச்சாமி போன்ற முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும், சார்பு அணி செயலாளர்களான ஆர். பிரபாகரன், லாலிரோடு ராதா, புரட்சித்தம்பி, ஏ. மணிகண்டன், கே.கே. சக்திவேல், ஹமீது, எஸ்.ஆர். ரவி ஆகியோரும் பங்கேற்றனர்.

பகுதி கழக செயலாளர்களான சாரமேடு சந்திரசேகர், சிவக்குமார், சுபம் மணிகண்டன், உலகநாதன், மௌனசாமி, வெள்ளிங்கிரி, கனகராஜ், நடராஜ், எம்.ஜி.ஜே. ராஜ்குமார், காட்டூர் செல்வராஜ், இலக்கடை ஜெயபால் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதோடு, வார்டு கழக செயலாளர்கள், மாவட்ட, பகுதி, வட்ட கழக, சார்பு அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலரும் இந்த மரியாதை நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...