அன்னபூர்ணா ஸ்ரீனிவாசன் காணொளியை நான் வெளியிடவில்லை - நீக்கப்பட்ட பாஜக நிர்வாகி பேட்டி

கோயம்புத்தூரில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் வீடியோ விவகாரத்தில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சதீஷ், தான் வீடியோவை வெளியிடவில்லை என்றும், தன்னிடம் விளக்கம் கேட்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.



Coimbatore: கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவராக இருந்த சதீஷ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கோரிய வீடியோ வெளியான விவகாரத்தில், சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பியதாகவும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் பாஜகவினர் சதீஷ் மீது கட்சி தலைமையிடத்தில் புகார் அளித்தனர்.

பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோரின் அனுமதி பெற்று, சிங்காநல்லூர் மண்டல தலைவர் சதீஷ் மீது பாஜக மாவட்டத் தலைவர் ரமேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிலையில், தான் சாதாரண கிளை பொறுப்பில் இருந்து கட்சியில் வளர்ந்து வந்ததாகவும், வீடியோவை மாவட்ட தலைவர் வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும், இது குறித்து தன்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை என்று சதீஷ் தெரிவித்தார்.

அதேபோல, தன்னுடைய பதவிக்காலம் கடந்த 31ம் தேதியுடன் காலாவதியான நிலையில், தன்னை எப்படி நீக்கம் செய்தார் என்று கேள்வி எழுப்பினார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் திரும்பியதும் இது குறித்து அவரிடம் விளக்கம் அளிக்க உள்ளதாக கூறினார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...