அன்னபூர்ணா ஸ்ரீனிவாசன் காணொளியை நான் வெளியிடவில்லை - நீக்கப்பட்ட பாஜக நிர்வாகி பேட்டி

கோயம்புத்தூரில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் வீடியோ விவகாரத்தில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சதீஷ், தான் வீடியோவை வெளியிடவில்லை என்றும், தன்னிடம் விளக்கம் கேட்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.



Coimbatore: கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவராக இருந்த சதீஷ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கோரிய வீடியோ வெளியான விவகாரத்தில், சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பியதாகவும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் பாஜகவினர் சதீஷ் மீது கட்சி தலைமையிடத்தில் புகார் அளித்தனர்.

பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோரின் அனுமதி பெற்று, சிங்காநல்லூர் மண்டல தலைவர் சதீஷ் மீது பாஜக மாவட்டத் தலைவர் ரமேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிலையில், தான் சாதாரண கிளை பொறுப்பில் இருந்து கட்சியில் வளர்ந்து வந்ததாகவும், வீடியோவை மாவட்ட தலைவர் வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும், இது குறித்து தன்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை என்று சதீஷ் தெரிவித்தார்.

அதேபோல, தன்னுடைய பதவிக்காலம் கடந்த 31ம் தேதியுடன் காலாவதியான நிலையில், தன்னை எப்படி நீக்கம் செய்தார் என்று கேள்வி எழுப்பினார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் திரும்பியதும் இது குறித்து அவரிடம் விளக்கம் அளிக்க உள்ளதாக கூறினார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...