அன்னபூர்ணா ஸ்ரீனிவாசன் காணொளியை நான் வெளியிடவில்லை - நீக்கப்பட்ட பாஜக நிர்வாகி பேட்டி

கோயம்புத்தூரில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் வீடியோ விவகாரத்தில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சதீஷ், தான் வீடியோவை வெளியிடவில்லை என்றும், தன்னிடம் விளக்கம் கேட்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.



Coimbatore: கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவராக இருந்த சதீஷ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கோரிய வீடியோ வெளியான விவகாரத்தில், சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பியதாகவும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் பாஜகவினர் சதீஷ் மீது கட்சி தலைமையிடத்தில் புகார் அளித்தனர்.

பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோரின் அனுமதி பெற்று, சிங்காநல்லூர் மண்டல தலைவர் சதீஷ் மீது பாஜக மாவட்டத் தலைவர் ரமேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிலையில், தான் சாதாரண கிளை பொறுப்பில் இருந்து கட்சியில் வளர்ந்து வந்ததாகவும், வீடியோவை மாவட்ட தலைவர் வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும், இது குறித்து தன்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை என்று சதீஷ் தெரிவித்தார்.

அதேபோல, தன்னுடைய பதவிக்காலம் கடந்த 31ம் தேதியுடன் காலாவதியான நிலையில், தன்னை எப்படி நீக்கம் செய்தார் என்று கேள்வி எழுப்பினார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் திரும்பியதும் இது குறித்து அவரிடம் விளக்கம் அளிக்க உள்ளதாக கூறினார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...