குரூப் 2 தேர்வு: கோவையில் ஆர்வத்துடன் பங்கேற்ற தேர்வர்கள்; தாமதமாக வந்த பெண் அனுமதி மறுப்பு

கோவையில் 113 மையங்களில் 33,490 பேர் குரூப் 2 தேர்வை எழுதினர். மணிக்கூண்டு பகுதி தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் தாமதமாக வந்த பெண் தேர்வாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.



கோவை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 2,327 காலிப் பணியிடங்களுக்கான இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு 2,763 மையங்களில் நடத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் மட்டும் 113 தேர்வு மையங்களில் 33,490 பேர் தேர்வு எழுதினர். தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்குள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. வருவாய்த் துறையினர் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.



மணிக்கூண்டு பகுதியில் உள்ள தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு அதிகாலை முதலே தேர்வர்கள் ஆர்வத்துடன் வந்தனர்.



அவர்கள் பாதுகாப்பு சோதனைக்குப் பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பிறகு தேர்வு எழுத வந்த ஒரு பெண் தேர்வாளரை உள்ளே அனுமதிக்க காவல்துறை அதிகாரி மறுத்துவிட்டார்.



"உங்களை உள்ளே அனுப்பினால் எனது வேலை போய்விடும்" என்று கூறிய அந்த அதிகாரி, கையெடுத்து கும்பிட்டு அந்த பெண்ணை வெளியே அனுப்பினார்.

இந்த சம்பவம் தேர்வு மையத்திற்கு வந்த மற்ற தேர்வர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. நேரம் தவறாமல் வருவதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்தியது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...