குரூப் 2 தேர்வு: கோவையில் ஆர்வத்துடன் பங்கேற்ற தேர்வர்கள்; தாமதமாக வந்த பெண் அனுமதி மறுப்பு

கோவையில் 113 மையங்களில் 33,490 பேர் குரூப் 2 தேர்வை எழுதினர். மணிக்கூண்டு பகுதி தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் தாமதமாக வந்த பெண் தேர்வாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.



கோவை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 2,327 காலிப் பணியிடங்களுக்கான இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு 2,763 மையங்களில் நடத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் மட்டும் 113 தேர்வு மையங்களில் 33,490 பேர் தேர்வு எழுதினர். தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்குள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. வருவாய்த் துறையினர் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.



மணிக்கூண்டு பகுதியில் உள்ள தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு அதிகாலை முதலே தேர்வர்கள் ஆர்வத்துடன் வந்தனர்.



அவர்கள் பாதுகாப்பு சோதனைக்குப் பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பிறகு தேர்வு எழுத வந்த ஒரு பெண் தேர்வாளரை உள்ளே அனுமதிக்க காவல்துறை அதிகாரி மறுத்துவிட்டார்.



"உங்களை உள்ளே அனுப்பினால் எனது வேலை போய்விடும்" என்று கூறிய அந்த அதிகாரி, கையெடுத்து கும்பிட்டு அந்த பெண்ணை வெளியே அனுப்பினார்.

இந்த சம்பவம் தேர்வு மையத்திற்கு வந்த மற்ற தேர்வர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. நேரம் தவறாமல் வருவதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்தியது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...