கோவையில் தங்கக் கட்டிகளை வாங்கி நூதன முறையில் மோசடி செய்த 4 பேர் கைது

கோவையில் தங்க வியாபாரியிடம் இருந்து ஒரு கிலோ தங்கக் கட்டிகளை வாங்கி மோசடி செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மோசடி செய்யப்பட்ட தங்கக் கட்டிகளும் மீட்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் சூலூரில் தங்க வியாபாரி ஒருவரிடம் இருந்து ஒரு கிலோ தங்கக் கட்டிகளை வாங்கி மோசடி செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நகை வியாபாரி ஹரிசங்கரை சந்திரசேகர் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்கக் கட்டிகளை வாங்க விரும்புவதாகக் கூறினார். கடந்த செப்டம்பர் 11 அன்று ஒரு கிலோ தங்கக் கட்டிகளுடன் சூலூரில் உள்ள பாப்பம்பட்டி பிரிவிற்கு வரும்படி ஹரிசங்கரிடம் கேட்டுக் கொண்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த ஹரிசங்கரிடம் சந்திரசேகர், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தனது மேனேஜர் ராஜ்குமாரை அனுப்புவதாகவும் கூறினார். ராஜ்குமார் தங்கக் கட்டிகளை வாங்கிய பின், தனது வாகனம் பழுதடைந்ததாகக் கூறி, லட்சுமி மில் பகுதியில் சந்திப்பதாகச் சொன்னார்.

ஆனால், லட்சுமி மில் பகுதிக்கு வந்த ஹரிசங்கர் ராஜ்குமாரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹரிசங்கர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் சைபர் கிரைம் பிரிவின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (53), நவீன் குமார் (25), பிரபு (25) மற்றும் ஒரு இளைஞர் ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

செப்டம்பர் 13 அன்று நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர், மோசடி செய்யப்பட்ட ஒரு கிலோ தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...