கோவையில் தொழிலாளி 200 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை: மூன்றாவது நாளாக தேடும் பணி தொடர்கிறது

கோவை சங்கனூரில் விஜயராகவன் என்ற தொழிலாளி 200 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மூன்றாவது நாளாக தீயணைப்புத் துறையினர் உடலைத் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை சங்கனூர் பகுதியில் வசித்து வந்த விஜயராகவன் என்ற தொழிலாளி, 200 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மூன்றாவது நாளாக தீயணைப்புத் துறையினர் அவரது உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



விஜயராகவன் என்ற விஜய், சங்கனூர் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். திருமணமாகாத அவர், பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்ததாகவும், குடும்பப் பிரச்சனையால் மனமுடைந்து காணப்பட்டதாகவும் தெரிகிறது.

நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, சற்று நேரத்தில் வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற விஜயராகவன், அருகிலுள்ள சண்முகம் என்பவருக்குச் சொந்தமான 200 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். உடனடியாக கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் உயிரற்ற நிலையில் கிடந்த விஜயராகவனின் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். உடல் கிடைக்காத நிலையில், தொடர்ந்து தேடும் பணிகள் நடந்து வருகின்றன. இன்று செப்டம்பர் 13 ஆம் தேதி, மூன்றாவது நாளாக தீயணைப்புத் துறையினர் அவரது உடலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...