கோவையில் வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள் செப்டம்பர் 30க்குள் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள் செப்டம்பர் 30க்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார். 1,777 பேர் நிலுவைத் தொகையை செலுத்தவில்லை.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி செப்டம்பர் 12 அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு மற்றும் மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கணக்கை நேர் செய்யாவிட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார்.


தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கோவை வீட்டுவசதி பிரிவுக்குள்பட்ட கணபதி, வெள்ளக்கிணறு, பெரியநாயக்கன்பாளையம், வீரகேரளம், காளப்பட்டி, முதலிபாளையம் பகுதிகளில் வீடு மற்றும் மனை ஒதுக்கீடு பெற்ற 1,777 பேர் வாரிய விதிமுறைகளின்படி பணம் செலுத்தும் காலம் முடிவடைந்தும் பணம் செலுத்தாமல் உள்ளனர்.


அரசு சார்பில் வட்டி தள்ளுபடி சலுகை பலமுறை அளித்தும் இந்த ஒதுக்கீட்டாளர்கள் நிலுவைத் தொகையை செலுத்த முன்வரவில்லை என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே, ஒதுக்கீட்டுதாரர்கள் உடனடியாக தங்களிடம் உள்ள அசல் விண்ணப்பம், ஒதுக்கீட்டு ஆணை, அசல் ரசீதுகள் போன்ற ஆவணங்களுடன் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கோவை வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, நிலுவைத் தொகையை செலுத்தி கிரைய பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.


மேலும், நிலுவைத் தொகையை செலுத்தாதவர்களின் ஒதுக்கீடு உத்தரவு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...