பொள்ளாச்சி நகராட்சியில் பயன்பாடற்ற தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்படும் - நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

பொள்ளாச்சி நகராட்சியில் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: பொள்ளாச்சி நகராட்சியில் பயன்பாடு இல்லாத தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொள்ளாச்சி நகராட்சியில் 1,243 பதிவு பெற்ற தள்ளுவண்டி கடைகள் உள்ளன. இவற்றுடன் பதிவு பெறாத தள்ளுவண்டிகளிலும் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக நகராட்சி ஆணையர் கணேசன் செப்டம்பர் 11 அன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வியாபாரம் செய்ய வேண்டும் என்றும், தினமும் வண்டியை எடுத்துச் சென்று மீண்டும் வியாபாரம் செய்யும் வகையிலேயே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், வியாபாரம் செய்யும் இடத்தில் பந்தல் போடுதல், தடுப்புகள் அமைத்தல், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கைகள் போடுதல் போன்ற நிரந்தரமாக இடத்தை பிடித்து வியாபாரம் செய்யும் வகையில் செயல்படக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து செயல்படுவது கண்டறியப்பட்டால், அது ஆக்கிரமிப்பாக கருதப்பட்டு அப்புறப்படுத்தப்படும் என்றும் நகராட்சி ஆணையர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...