கோவையில் ஆட்டோ டிரைவர்கள் இடையே கத்தியுடன் மோதல்: ஒருவர் காயம்

கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே இரு ஆட்டோ டிரைவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தார். சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானது.


Coimbatore: கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மாலை நடு ரோட்டில் இரண்டு வாலிபர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் அவர்கள் கற்களை எடுத்து வீசியதுடன், கத்தியால் துரத்தியும் அட்டகாசம் செய்தனர். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் சுந்தராபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.

மேற்கொண்ட விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான கதிரேசன் (35) மற்றும் உதய சூரியன் (30) என்பது தெரியவந்தது. இருவருக்கும் அடிக்கடி ஆட்டோ சவாரி எடுப்பதில் தகராறு இருந்து வந்தது தெரியவந்தது.

நேற்று (செப்டம்பர் 11) ஏற்பட்ட தகராறின் போது, கதிரேசன் கத்தியால் குத்தியதில் உதய சூரியனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த உதய சூரியன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கதிரேசனிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மோதல் காட்சிகள் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...