கோவையில் ஆட்டோ டிரைவர்கள் இடையே கத்தியுடன் மோதல்: ஒருவர் காயம்

கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே இரு ஆட்டோ டிரைவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தார். சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானது.


Coimbatore: கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மாலை நடு ரோட்டில் இரண்டு வாலிபர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் அவர்கள் கற்களை எடுத்து வீசியதுடன், கத்தியால் துரத்தியும் அட்டகாசம் செய்தனர். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் சுந்தராபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.

மேற்கொண்ட விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான கதிரேசன் (35) மற்றும் உதய சூரியன் (30) என்பது தெரியவந்தது. இருவருக்கும் அடிக்கடி ஆட்டோ சவாரி எடுப்பதில் தகராறு இருந்து வந்தது தெரியவந்தது.

நேற்று (செப்டம்பர் 11) ஏற்பட்ட தகராறின் போது, கதிரேசன் கத்தியால் குத்தியதில் உதய சூரியனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த உதய சூரியன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கதிரேசனிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மோதல் காட்சிகள் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...