பொள்ளாச்சி அருகே இரு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: பல பகுதிகளில் நாளை மின் தடை

பொள்ளாச்சி அருகே கோவில்பாளையம் மற்றும் தேவனாம்பாளையம் துணை மின் நிலையங்களில் நாளை (செப்.11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள இரண்டு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல பகுதிகளில் நாளை (செப்டம்பர் 11) மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, மில் கோவில்பாளையம், முள்ளுபாடி, செங்குட்டைபாளையம், என்.ஜி புதூர், வடக்கிபாளையம், பெரும்பதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

அதேபோல், தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம், குளத்துப்பாளையம், சேரி பாளையம், ஆண்டிப்பாளையம், வகுதம்பாளையம், செடிபுதூர் ஒரு பகுதி, கப்பளாங்கரை ஒரு பகுதி, செரிபாளையம் ஆகிய பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

இந்த மின் தடை நாளை (செப்டம்பர் 11) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நீடிக்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மின்நுகர்வோர் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...