உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 24வது ஆண்டு பரிசளிப்பு விழா: சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை சார்பில் 24வது ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது. சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழக அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இன்று பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை சார்பில் 24வது ஆண்டாக இந்த விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார்.



விழாவில் 2023-2024 ஆம் ஆண்டில் கல்லூரி அளவில் துறை வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற 24 மாணவர்களுக்கு ரொக்க பரிசாக தலா ரூ.3,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.



மேலும், பல்கலைக்கழக தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற 15 மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



சிறப்பு பரிசாக, வணிகவியல் துறையில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சபரீஷ்வரிக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் முன்னாள் மாணவருமான சின்னத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.





விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகளான ஆடிட்டர் கந்தசாமி, ஆடிட்டர் கண்ணன், ராஜமாணிக்கம், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகளான முனைவர் கிருஷ்ணன், பேராசிரியர் முகமது ஜாபர் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு விழா மாணவர்களின் கல்வி சாதனைகளை கொண்டாடும் விதமாக சிறப்பாக நடைபெற்றது.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...