உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 24வது ஆண்டு பரிசளிப்பு விழா: சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை சார்பில் 24வது ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது. சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழக அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இன்று பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை சார்பில் 24வது ஆண்டாக இந்த விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார்.



விழாவில் 2023-2024 ஆம் ஆண்டில் கல்லூரி அளவில் துறை வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற 24 மாணவர்களுக்கு ரொக்க பரிசாக தலா ரூ.3,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.



மேலும், பல்கலைக்கழக தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற 15 மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



சிறப்பு பரிசாக, வணிகவியல் துறையில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சபரீஷ்வரிக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் முன்னாள் மாணவருமான சின்னத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.





விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகளான ஆடிட்டர் கந்தசாமி, ஆடிட்டர் கண்ணன், ராஜமாணிக்கம், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகளான முனைவர் கிருஷ்ணன், பேராசிரியர் முகமது ஜாபர் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு விழா மாணவர்களின் கல்வி சாதனைகளை கொண்டாடும் விதமாக சிறப்பாக நடைபெற்றது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...