மேட்டுப்பாளையத்தில் வீடு வீடாக சென்று பாஜக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார் மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பொன்விழா நகரில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வீடு வீடாகச் சென்று பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமை நடத்தினார். அவர் மத்திய அரசின் சாதனைகளையும், பிரதமர் மோடியின் நிர்வாகத்தையும் எடுத்துரைத்தார்.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் துவங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முகாம் அலுவலகம் அமைந்துள்ள பொன்விழா நகர் பகுதியில் இன்று பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

பொன்விழா நகரில் உள்ள வீடுகளுக்கு கட்சி நிர்வாகிகளுடன் நேரடியாக சென்ற மத்திய இணை அமைச்சர் எல். முருகன், காலை 10 மணிக்கு மத்திய அரசின் சாதனைகளை கூறியும் பிரதமர் மோடியின் திறமையான அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறி உறுப்பினர் சேர்க்கை செய்தார்.



பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை செய்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, துணை தலைவர் விக்னேஷ் உள்ளிட்ட முக்கிய பா.ஜ.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...