மேட்டுப்பாளையத்தில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் கோலாகலமான ஊர்வலம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் வழிபாட்டுக்குப் பிறகு, பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன.

மேட்டுப்பாளையம் சி.டி.சி டெப்போ பகுதியிலிருந்து துவங்கிய ஊர்வலம், சுப்பிரமணியர் கோவில் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் முடிவடைந்தது.





ஊர்வலத்தின் போது, சென்டை மேளம் முழங்கியது, மேலும் கேரள நடனக் கலைஞர்கள் முருகன், பட்டாம்பூச்சி போன்ற வேடங்களில் கண்கவர் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.



ஊர்வலத்தில் பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இடம்பெற்றன.



மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், ரூபாய் நோட்டுகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், கருடன் தேரோட்டியாக வலம் வந்த விநாயகர் என பல வித்தியாசமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் காட்சியளித்தன. இந்து முன்னணி நிர்வாகிகள் ஊர்வலத்தை முன்னின்று நடத்தினர்.

கண்கவர் வான வேடிக்கைகளுடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று ஆர்வத்துடன் பார்வையிட்டனர். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிகுந்த உற்சாகத்துடனும், பக்தி பரவசத்துடனும் நடைபெற்றது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...