மேட்டுப்பாளையத்தில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் கோலாகலமான ஊர்வலம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் வழிபாட்டுக்குப் பிறகு, பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன.

மேட்டுப்பாளையம் சி.டி.சி டெப்போ பகுதியிலிருந்து துவங்கிய ஊர்வலம், சுப்பிரமணியர் கோவில் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் முடிவடைந்தது.





ஊர்வலத்தின் போது, சென்டை மேளம் முழங்கியது, மேலும் கேரள நடனக் கலைஞர்கள் முருகன், பட்டாம்பூச்சி போன்ற வேடங்களில் கண்கவர் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.



ஊர்வலத்தில் பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இடம்பெற்றன.



மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், ரூபாய் நோட்டுகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், கருடன் தேரோட்டியாக வலம் வந்த விநாயகர் என பல வித்தியாசமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் காட்சியளித்தன. இந்து முன்னணி நிர்வாகிகள் ஊர்வலத்தை முன்னின்று நடத்தினர்.

கண்கவர் வான வேடிக்கைகளுடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று ஆர்வத்துடன் பார்வையிட்டனர். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிகுந்த உற்சாகத்துடனும், பக்தி பரவசத்துடனும் நடைபெற்றது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...