திமுக, திகவினால் ஆன்மீகத்தை அழிக்க முடியாது: மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழகத்தில் ஆன்மீகத்தை அழிக்க திமுக, திகவினால் முடியாது எனக் கூறினார். தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் விமர்சித்தார்.



கோவை: மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல். முருகன், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தினமும் ஆறு கொலைகள் நடக்கும் அளவுக்கு மிக மோசமான நிலை தமிழகத்தில் உள்ளது. வீதி வீதியாக முக்குக்கு ஒரு டாஸ்மாக் கடை திறந்து மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வருகிறார்கள்."

"ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கைது எதற்காக நடந்தது என்று அரசாங்கத்திற்கே தெரியவில்லை. ஆன்மீகம் என்றாலே திமுக அரசு கைது செய்கிறது. விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலைகள் வைக்க திமுக அரசு கடும் நெருக்கடி கொடுத்தது. அதனையும் தாண்டி இன்று மக்கள் எழுச்சியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்று வருகிறது."

"தமிழகம் ஒரு ஆன்மீக பூமி. அதனை திகவும், திமுகவும் அழிக்க நினைத்தால் அது முடியாது," என்று எல். முருகன் தெரிவித்தார்.



முன்னதாக, மேட்டுப்பாளையத்தில் உள்ள பொன்விழா நகரில் அமைந்துள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனையடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனுடன் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...