திமுக, திகவினால் ஆன்மீகத்தை அழிக்க முடியாது: மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழகத்தில் ஆன்மீகத்தை அழிக்க திமுக, திகவினால் முடியாது எனக் கூறினார். தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் விமர்சித்தார்.



கோவை: மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல். முருகன், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தினமும் ஆறு கொலைகள் நடக்கும் அளவுக்கு மிக மோசமான நிலை தமிழகத்தில் உள்ளது. வீதி வீதியாக முக்குக்கு ஒரு டாஸ்மாக் கடை திறந்து மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வருகிறார்கள்."

"ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கைது எதற்காக நடந்தது என்று அரசாங்கத்திற்கே தெரியவில்லை. ஆன்மீகம் என்றாலே திமுக அரசு கைது செய்கிறது. விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலைகள் வைக்க திமுக அரசு கடும் நெருக்கடி கொடுத்தது. அதனையும் தாண்டி இன்று மக்கள் எழுச்சியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்று வருகிறது."

"தமிழகம் ஒரு ஆன்மீக பூமி. அதனை திகவும், திமுகவும் அழிக்க நினைத்தால் அது முடியாது," என்று எல். முருகன் தெரிவித்தார்.



முன்னதாக, மேட்டுப்பாளையத்தில் உள்ள பொன்விழா நகரில் அமைந்துள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனையடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனுடன் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...