யூடியூப் சேனல்களை முறைப்படுத்த புதிய பிராட்காஸ்டிங் மசோதா வர உள்ளது - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

கோவையில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி அளித்தார். யூடியூப் சேனல்களை முறைப்படுத்த புதிய பிராட்காஸ்டிங் மசோதா வர உள்ளதாக தெரிவித்தார்.



கோவை: கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில், மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.





இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.



மலிவு விலை மருந்துகள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்த மருந்தகம் திறக்கப்பட்டுள்ளதாகவும், மார்கெட் விலையை விட குறைவான விலைக்கு மருந்துகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்தியா முழுவதும் இது பயனுள்ள திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

தமிழகத்தில் PM-SHRI பள்ளிகளை நிறுவுவதற்கான ஒப்புதல் குறித்து, மத்திய கல்வித் துறை அமைச்சர் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், ஆனால் இதுவரை தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். புதிய தேசிய கல்விக் கொள்கை அனைத்து மக்களின் கருத்துகளையும் கேட்டு உருவாக்கப்பட்டதாகவும், ஆரம்பக் கல்வியில் தாய்மொழி கல்வியை வலியுறுத்துவதே இதன் நோக்கம் என்றும் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்துவோம் என்றும், தொழில்நுட்ப வளர்ச்சியை நிறுத்த முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

யூடியூப் சேனல்கள் மற்றும் இணைய ஊடகங்கள் குறித்து பேசிய அமைச்சர், "மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எல்லோரும் செய்தியாளர்களாக இருக்கின்றார்கள். யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் தொடங்கலாம், எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற சூழல் இருந்து வருகிறது. இதனை முறைப்படுத்த புதிய பிராட்காஸ்டிங் மசோதா வர இருக்கிறது" என்றார்.

யூடியூப் சேனல்கள் மற்றும் இணைய ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அமைச்சர், தேசத்திற்கு எதிராக செயல்பட்ட 69 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர், விஜய்யின் மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றும், ஊடகங்களே இதனை பெரிதுபடுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...